அவனடிமை எழுதிய பாடல் : எண்சீர் வெண்செந்துறை பொருளிலா ஓசையை புகழ்பெறும் பாட்டென பெரியமாற் றந்தரும் பொறியா சிரியராம் அறிவிலா அகந்தையை அடக்கியுள் இரைச்சலை அகற்றிடும் அமைதியேஅருட்குரு உருவமாம். அவனடிமை ஐயா எழுதியவை: வெண்டாழிசை மூவடிப் பா (கருவிளம் + கருவிளம் + கருவிளம் + கருவிளம்) 1. மரிப்பதோ ஒருமுறை மனிதரே வரிப்பணம் பறிகொடுத் திடுவதோ பலமுறை சிரித்திடத் தெரிந்தவர் சிரித்திடு வீர். 2. கருவிளப் பதங்களில் கதறிட கருத்துடன் கருவென முருகனைக் கருதிட கனவுடை கருவுரு கலைத்திடு வான். பாடல்கள் சரியாக உள்ளன ஐயா. ................................................................................................................................................. தமிழநம்பி வெண்டாழிசை - 2. உன்றன் இல்லம் ஓங்க எண்ணி இன்றவ் வீழம் வீழச் செய்தாய்! நன்றோ கீழே! நாணு! - குணமதி. பாட்டு நன்றாக உள்ளது. பாராட்டு. - தமிழநம்பி --------------------------------------- காற்றும் நீரும் காணும் யாவும் தோற்றம் நீயே போற்றி நின்றேன் ஏற்றம் தாராய் என்று. என்றும் நின்றாள் ஏத்து கின்றேன் குன்றில் கோவில் கொண்டாய்க் கந்தா மண்ணில் அன்பே மாற்று. மாறும் நெஞ்சில் மையல் உன்மேல் சேரும் மாறென் சிந்தை மாற்று காரென் றெம்மைக் காத்து. உமா. மூன்று பாக்களும் நன்றாக அமைந்துள்ளன. - தமிழநம்பி. ------------------------------------------ விண்ணோர் வாழ்வை வேண்டின் மண்ணில் பொன்னை ஈதல் போலே பின்னும் கண்ணைத் தானம் செய். நல்லார் அல்லார் எல்லாம் சொல்லும் சொல்லால் ஆகும் தீச்சொல் தீயாய்க் கொல்லச் சேரும் தாழ்வு. -- உமா. பாடல்கள் சரியாக அமைந்துள்ளன, உமா. - தமிழநம்பி. ------------------------------------ இன்னுமொரு மூவடி வெண்தாழிசைப் பா: பணிநீ பார்த்திட சுடுமே உன்மடிக் கணினிக் கிடமா கம்பளி, கிடக்கை ? துணிமூ டிடப்பொறி, தீ ! - அவனடிமை. ஐயா, பாடல் சரியாக உள்ளது. பொருள் சரியாக விளங்கவில்லை. விளக்கிச்சொல்லுங்கள். - தமிழநம்பி ------------------------------------------- வணக்கம் ஐயா! இதோ இரண்டாம் வகை (தேமாச் சீர் ) வெண்டாழிசையில் சில பாப்பூக்கள்: ஓய்வு பெற்றோர் ஓயா தேதம் சேய்கள் சார்ந்தே சிந்தித் தாலவ் வோய்வும் எப்போ தோ ? செம்மொ ழியால் செல்வம் சேர்த்து சும்மா சுற்றும் சோம்பே றிகட்கே கிம்மா நாடா, ஏன் ? நித்தம் சத்தம் நில்லாப் பெட்டி மொத்த நாட்டை மூழ்கக் கட்டும் இத்தொல் லைப்பெட் டி. நன்றி, ’அவனடிமை’ --------------------------------------- அவனடிமை ஐயா, வணக்கம். இரண்டாம் பாடல் நான்காம் சீர் ஓரசையில் உள்ளது. இறுதியில் ‘கே’ சேர்த்துள்ளேன். மூன்று பாடல்களும் சரியாக அமைந்துள்ளன. - தமிழநம்பி |