தமிழ் தோட்டம் இலவச படைபாளர்கள் யாவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
லஷ்மியின் படைப்பு
இது கவிதை அல்ல பாடல்
உன்னோடு வாழ்வதற்கு ஒரு ஜென்மம் போதாது
இறந்தாலும் பிறப்பேனே உன்னோடு வாழ்வதற்கு
சித்திரை மாத வெயிலும் கூட பனியாக விழுகிறதே
மார்கழி மாத பனியும் கூட வெயில் போலே சுடுகிறதே
காலம் மாற்றி காதல் ஆக்கி காதில் சொல்லு கிளியே
(உன்னோடு வாழ்வதற்கு)
வாயில் பேச வார்தைகள் இல்லை
கண்ணின் பாஷை ஆயிரம்
கண்ணே நீயும் புரிந்துக் கொண்டால்
உணர்ந்து போகும் காதலும்
கருவறையில் ஏற்றி வைத்தேன்
பிறந்து விடு சீக்கிரம்
தாமதங்கள் நீயும் செய்தால்
இறந்து விடும் என் மனம்
(உன்னோடு வாழ்வதற்கு)
காற்றோடு சேர்ந்து வந்து
கண்களிலே ஒளிந்தவளே
காற்றாக நானும் வந்து
கண்களிலே தேடுகிறேன்
ஒளிந்த உன்னை தேடித் தேடி
உடைந்துப் போகும் என் மனம்
ஒளிந்த நீயும் காட்சி தந்தால்
ஒன்றாய் சேரும் என் மனம்
(உன்னோடு வாழ்வதற்கு)
இருக்கும் காலம் முழுதும்
நானும் உனக்காக வாழுகிறேன்
உனக்காக வாழும் என்னை
உயிரோடு கொள்கிறாய்
என்னை நீயும் ஏற்றுக் கொண்டால்
நூறு ஜென்ம வரம் கேட்பேன்
என்னை நீயும் விட்டுச் சென்றால்
அன்றே சாகும் வரம் கேட்பேன்
(உன்னோடு வாழ்வதற்கு)