|
|
காதல் தேசத்தில்
நீ ஒரு தீவிரவாதி
மவுனம் காத்து
என்னை கொல்லும்
வித்தைக்காரி
திருவிழா கூட்டத்தில்
ஜாதி சண்டைகள்
நம் கண்களை சொல்கிறேன்.
சமரசம் செய்ய
காதலை தூது விடவா?
உன் கண்களில்
என்ன காந்த அலைகளா?
இல்லை... இல்லை...
அவை என்னிடம் வீசப்பட்ட
காதல் வலைகள்.
உன் கைகளில்
என்ன காகித புத்தகங்களா?
இல்லை... இல்லை...
அவை என்னை வரைந்த
காவிய சித்திரங்கள்.
*************************************************
நன்றி (கே. ஆர். ராஜன்)
-------------------------------------------------------------------------------- |
Back |
|