உண்மைதான் ஒரு பிரச்சனை வருகிறதென்றால் ஏதோ ஒன்றை நம் மனது எதிர்பார்க்றிது. அந்த எதிர்ப்பார்ப்புக்கு அர்த்தம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் பிரச்சனைக்கு மூல காரணம் நம்முடைய மனதும், எண்ணங்களும்தான். நம்முடைய மனதை விரிவாக்குவோம்.
ஆண்டவன் நமக்கு கொடுத்த ஒரு மிகப்பெரிய வரம், நம்முடைய மனதுக்கு எல்லையே கிடையாது என்பதுதான். அந்த மனதை எவ்வளவு வேண்டுமானாலும் விரிக்கலாம். நம்முடைய மனதை எவ்வளவுக்கு எவ்வளவு விரிக்கிறோமோ அந்த அளவிற்கு நாம் பிரச்சனைகளில் இருந்து விடுபடுகிறோம். நம்முடைய மனது சிறிதாக, சிறிதாக புதிதாக
பிரச்சனைகள் வந்த வண்ணம் இருக்கின்றது. விளைவு நித்தம், நித்தம் போராட்டம், வாழ்க்கையில் விரக்தி, தோல்வி என்றெல்லாம் வருகிறது.
பிரச்சனைகளுக்கு மனது ஒரு காரணமாக இருந்தாலும் இன்னமொருகாரணம் இருக்கிறது.
நம்முடைய எண்ணங்கள், மனது நினைப்பதுதானே எண்ணங்கள் என்று நீங்கள் கேட்கலாம். மனது வேறு எண்ணங்கள் வேறு. மனது என்பது நம்முடைய எண்ணங்கள் சம்பந்தபட்டது அல்ல. (என்ன சார் குழப்பமா இருக்கா)
உதாரணத்திற்கு பேரூந்து நிலையத்தில் உங்கள் ஊருக்கு போக பேரூந்துக்காக காத்திருக்கிறீர்கள். அப்போது உங்கள் ஊருக்கு போக இரண்டுபஸ் வருகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். ஒரு பஸ் பாயிண்ட் டூ பாயிண்ட், இன்னொன்று லோக்கல் எல்லா இடத்திலேயும் நின்று செல்லக்கூடியது. உடனே உங்கள் மனது என்ன
சொல்லும் பாயிண்ட் டூ பாயிண்ட், பஸ்சில் ஏறினால் சீக்கிரம் வீட்டுக்கு போயிடலாம், லோக்கல ஏறினால் என்றைக்கு வீட்டுக்குபோக, பாயிண்ட் டூ பாயிண்டில் ஏறு என்று உங்கள் மனது உங்கள் மூளைக்கு ஆணையிட உங்கள் கால்கள் தானாகவே பாயின்ட் டூ பாயிண்ட் பஸ்நோக்கி பயணிக்கும். சிம்பிளாக சொல்ல
வேண்டுமென்றால் மனது அறிவுசார்ந்த ஒரு விஷயம்.
ஆனால் எண்ணங்கள் வேறு பாயிண்ட் டூ பாயிண்ட் ஏறினால் கரெக்டா போயிடுவோமா, வேகமா போகும் போது ஆக்சிடெண்ட் ஆயிட்டா, அல்லது டயர் பஞ்சர் ஆயிட்டா இப்படி நினைப்பது எண்ணங்கள்.
உங்கள் எண்ணங்கள் நல்லவையாக இருக்கட்டும், அவையும் பாசிட்டிவாக இருக்கட்டும், அப்புறம் பாருங்கங்கள் உங்கள் வாழ்க்கையுல் எல்லாமே இனி ஜாலியாகத்தான் இருக்கும்.
உங்கள் கருத்துக்களை இங்கு பதிவுச்செய்யுங்களேன்...்.
நன்றி தினமலர்
-------------------------------------------------------------------------------- |