» தலை வாசல்
» நகைச்சுவை
» கவிதை
» கட்டுரைகள்
» சிறுகதைகள்
» பொது அறிவு
» பாப்பா பாடல்கள்
» தமிழில் எழுத

» இலவச விளம்பரம்

» தெனாலிராமன் கதைகள்
» நீதிபதி மரியாதை ராமன் கதைகள்

புதியது

படைப்பாளர்கள் பக்கம்

»  Articles are Published Freely without any Money

உங்கள் படைப்புகளை அனுபுவதற்கு இங்கே சுட்டவும்
Google
 

புகழ்பெற்ற சிரிப்பு

அளப்பதில் போட்டி


அண்டப் புளுகனும் ஆகாசப் புளுகனும் பேசிக் கொண்டிருந்தனர்.

என்னிடம் ஒரு கிழக் குதிரை இருந்தது. ஒரு முறை நான் வெளியூர் செல்லப் புறப்பட்டேன். குறிப்பிட்ட ரயில் வண்டியைத் தவறவிட்டு விட்டேன். எனக்கோ அவசரம். பண்ணைக்கு விரைந்து வந்த நான் என் குதிரையில் ஏறி அமர்ந்தேன். இதற்கே அரை மணி நேரம் ஆகி விட்டது. நூறு கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற ரயிலை அடுத்த அரை மணி நேரத்தில் பிடித்து விட்டேன். அவ்வளவு வேகம் என் குதிரை, என்று அளந்தான் அண்டப் புளுகன்.

உன் குதிரை என்ன வேகம்? நான் ஒரு சமயம் பண்ணையில் இருந்தேன். திடீரென்று மழை பிடித்துக் கொண்டது. புயல் காற்று பயங்கர வேகத்தில் வீசத் தொடங்கியது. வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்று நினைத்த நான் குதிரையில் ஏறி அமர்ந்தேன்.

புயல் மழையை விட வேகமாகப் பறந்தது குதிரை. என் மீது ஒரு துளி மழை கூடப் பெய்யவில்லை. ஆனால் பத்தடி தூரத்தில் என்னைத் தொடர்ந்து வந்த நாய் மழை வெள்ளத்தில் நீச்சல் அடித்துக் கொண்டே வந்தது, என்று அளந்தான் ஆகாசப் புளுகன்.


--------------------------------------------------------------------------------

 

 

[சர்தார்ஜி ஜோக்ஸ்] [முட்டாள் ஜோக்ஸ்] [கடி ஜோக்ஸ்]

[புகழ்பெற்ற சிரிப்பு] [தத்துவம்]

Back

இலவச சுட்டிகள்

உங்கள் பார்வை எண்

தமிழ் தோட்டம் ஆரம்பித்த நாள் 01-03-2006

Last updated on Wednesday, 03/01/2007