சிந்தனை மொழிகள்
சோம்பல்.
சோம்பலை அணைப்பவனுக்கு நான்கு திசைகள்,
உயர்த்தும் ஏணி, நல்லவன் கூட எதிரியாகிறது.
இழுத்து மூடிப் படுப்பதை விட சோம்பேறிக்கு
உலகில் எதுவுமே இன்பமாகாது.
அடுத்தவன் மேல் குறை கூறி
ஆக்கமற்று இருப்பவனும் சோம்பேறி தான்.
உள்ளம் ஆரோக்கியமற்றவன் சோம்பேறி. இவனோடு
உடலும், சுகாதாரமற்ற புறநிலைகளும் கூட்டுறவாகிறது.
சோம்பல் - ஒளியாகும் வாழ்வின் சாம்பல்.
தேம்பல் இதன் பரிசாகும்.
நன்றி
வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க். |