மிருகபலத்தால் ஒரு போதும்
உயர்வு பெறமுடியாது.ஆன்மிக பலத்தால் மட்டுமே நாம் எமுச்சி பெற
முடியும். நாம் அனைவரும் மகத்தான பணிகளைச் செய்யவே
பிறந்திருக்கிறோம்.
மேலைநாட்டு
விஞ்ஞானத்தையும் நம் நாட்டு வேதாந்தத்தையும் இணையுங்கள். இவை
இரண்டுமே வாழ்வின் அடிப்படை லட்சியங்களாகும்.
யார் ஒருவர்
எதைப்பெறுவதற்குத் தகுதி உடையவராக இருக்கிறாரோ அதை அவர் பெறவிடாமல்
தடுத்து நிறுத்துவதற்கு இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள எந்த
சக்தியாலும் முடியாது.
துன்பம் விளைவதற்கு
அறியாமையைத் தவிர வேறு எதுவுமே காரணமில்லை. இந்த உண்மையைப்
பட்டபகல் வெளிச்சத்தைப் போல என்னால் தெளிவாக புரிந்துக்
கொள்ளமுடிகிறது.
ஆயிரம் முறை
தோல்வியுற்றாலும் லட்சிய நோக்கிலிருந்து பின்வாங்காதீர்கள்.
போராட்டங்களையும் தவறுகளையும் பொருட்படுத்தாதீர்கள்.
லட்சியப்பாதையில் வீறுநடைபோடுங்கள்.
அறிவு வளர்ச்சிக்கு ஒரே
ஒரு வழிமுறை தான் இருக்கின்றது.நம்முடைய மனத்தை ஒரு
முகப்பபடுத்துவதே அந்த வழி.
எதையும் வெறும்
பரபரப்புடன் மட்டும் அணுகுவது கூடாது. தூய்மை, பொறுமை, விடாமுயற்சி
என்ற இம்முன்றினையும் பின்பற்றினால் வெற்றிச் சிகரத்தை
எட்டிப்பிடிக்கலாம்.
மூளை - தசைகள் -
நரம்புகள் என்று உன் உடலின் ஒவ்வொரு பாகத்திலும் அந்த ஒரு
கருத்தினையே பரவ விடுங்கள். மற்ற எந்த கருத்தினையும் உங்கள்
மனத்திற்குள் நுழைய அனுமதிக்காதீர்கள்.
நாம் நினைக்கும்
எண்ணங்கள் யாவும் விதை வடிவத்தை பெற்று பின்னர் நம் சூட்சம
சரீரத்தில் சிறிது காலத்திற்கு தங்கி பின்னர் வெளிப்பட்டு வந்து
அதற்குரிய பலன்களைத் தருகின்றன. இந்தப் பலன்களே மனிதனுடைய
வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன.
ஒரு நல்ல கருத்தை
எடுத்துக் கொள்ளுங்கள் - அந்த ஒரு கருத்தையே உங்கள் வாழ்க்கை
மயமாக்குங்கள். அக்கருத்தையே நாளும் கனவு காணுங்கள். அக்கருத்தை
முன்னிறுத்தியே வாழ்க்கையை நடத்துங்கள். வாழ்க்கை சொர்க்கமாகும்.
மற்றவர்களின் தெய்வீக
இயல்பை வெளிப்படுத்த உதவி செய்வது தான். நம்முடைய தெய்வீக இயல்பை
வெளிப்படுத்துவதற்கான ஒரே வழியாகும்.
பொய் சொல்வது சாதாரண
விஷயம் அல்ல. அது ஒரு கலை.பொய் சொல்ல அசாத்திய திறமை வேண்டும்.
ஏராளமான ஞாபக சக்தி வேண்டும். ஆனால் பொய் சொல்லி பிறரை
ஏமாற்றுபவர்கள் மற்ற ஏமாற்றுக்காரர்களாலேயே பாடம் பெறுவார்கள்.
துக்கம் என்பது
அறியாமையின் காரணமாகத்தான் ஏற்படுகிறது.வேறு எதனாலும் அன்று.
கடலைக் கடக்கும் இரும்பு
போன்ற மன உறுதியும்; மலைகளையே துளைத்துச் செல்லும்; வலிமை
தோள்களுமே; நமக்குத்தேவை.வலிமைதான் வாழ்வு பலவீனமே மரணம்.
மிகப்பெரிய இந்த உண்மையை உணந்து கொள்ளுங்கள்.
இந்த வலைத்தளம் பற்றிய
உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள்
கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட
உதவியாக இருக்கும்.
நன்றி.
உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள்
விரைவில்.