சித்திரைப்பெண்ணே சித்திரைப்பெண்ணே!
மெல்லசிவந்த
மாங்கொழுந்தும்
மண்ணில் சிதறிக்கிடக்கும் வேம்பூவும்
கொள்ளை அழகாய் நறுமலர்கள்பூக்கக்
கொண்டாடிவரும் வசந்தமுடன்
மஞ்சள்பலாவும் பலஇன் கனியும்
மக்கள் மகிழத் திருவிழாக்களும்
பஞ்சமின்றி பாரில் தந்திடவே
பாவை சித்திரை வருகின்றாள்!
உண்ணும் உணவிலும் வாழ்க்கையின்
உயர்ந்த தத்துவம் பல உண்டு
எண்ணிப் பார்க்கையிலே அதுவும்
எளிதில் நமக்கு புலனாகும்
இனிக்கும் வாழ்க்கை என்றைக்கும்
இசைந்தே கசப்பையும் ஏற்றுவிடும்!
ஊழிக்கால ஓவியத்தேரை
ஒவ்வொருவருடமும் ஓட்டிவரும்
வாழி சித்திரை !வாழிய நீ!
வாழ்வில் வளமே தங்கும் இனி!
......................................................................................
நன்றி
ஷைலஜா |