என்னைப் [தமிழநம்பி]
பற்றிய அறிமுகக்குறிப்பு:
தொழில்நுட்பம் படித்துத்
தொலைத்தொடர்புத் துறையில் பணியாற்றியவன்.
தமிழில் முதுகலை தேறியவன். இதழியல் மக்கள் தொடர்பியல் படித்தவன்.
தனித்தமிழ் இலக்கியத் திங்களிதழ் 'தென்மொழி'யின்' ஆசிரியர்
பாவலரேறு பெருஞ்சித்திரனார் தந்த ஊக்கத்தால் முதலில் அறிவியல்
கட்டுரைகள் எழுதினேன். அக்கட்டுரைகள் தென்மொழி இதழில் வந்தன.
முனைவர் ஆபிரகாம் கோவூர் எழுதிய நூலின் பகுதிகளை மொழியாக்கம்
செய்தவன்.அவை புதுச்சேரியில் முன்னர் வெளிவந்த "மதி", “தமிழருவி”
இதழ்களிலும் "திண்ண", "கீற்று", “பதிவுகள்” ஆகிய மின்னிதழ்களிலும்
‘நற்றமிழ்’ அச்சிதழிலும் வந்தன.
மொழிபெயர்ப்புக் கட்டுரை ( திருகிறக்கை ஊர்தி) எழுதியதற்காகத்
தேவநேயப்பாவாணர் ஐயா அவர்களால் பாராட்டப்பெற்றவன். தஞ்சைத் தமிழ்ப்
பல்கலைக் கழகம் வெளியிட்ட "அருங்கலைச் சொல் அகராதி" (Dictionary of
technical terms)ப் பணியில் துணையிருந்த முகன்மையானவர்களுள் ஒருவன்.
தென்மொழி, தெளிதமிழ், நற்றமிழ் இதழ்கள் தந்த ஊக்கத்தால் மரபு பாடல்கள்
எழுதுகிறவன். தனித்தமிழ் தொடர்பான கட்டுரைகளும் தனித்தமிழ்
எதிர்ப்பாளர் கருத்துகளுக்கு தக்க மறுமொழி கூறும்
கட்டுரைகளும் நூல் ஆய்வும் பிறவும் "திண்ணை"யில் எழுதியிருக்கின்றேன்.
நற்றமிழ் இதழின் உறுப்பாசிரியப் பொறுப்பில் இயன்றவரை பணியாற்றுகிறேன்.
‘பாடல் வளாகம்’ அமைப்பின் வழி மரபு பாக்கள் எழுத பயிற்சி வகுப்பு
நடத்தியவன். “தமிழ்க் கணினி வலைப்பதிவு பயிலரங்கை” விழுப்புரத்தில்
நண்பர்களின் உதவியோடு நடத்தியவன். நவம்பர் 2007 இல் (http://thamizhanambi.blogspot.com)
என்ற வலைப்பதிவு தொடங்கி தொடர்ந்து எழுதி வருகிறேன். எண்பதிற்கும்
மேற்பட்ட பதிவுகள் எழுதியிருக்கிறேன். தமிழ் தமிழர் நலன்காக்க
எழுதியவற்றை என் வலைப்பதிவில் காணமுடியும். |