|
|
இத்
தமிழ்த்தோட்டத்தில்
உங்கள்
நகைச்சுவைகள் - தொகுப்பு வெளிவரவேண்டுமெனில்,
உங்கள்
படைப்புகளை
எழுதி
அனுப்புங்கள்...
அவை
இலவசமாக
தமிழ்த்
தோட்டதில்
வெளிவரும்....
உங்கள்
படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
tamilparks
@
gmail.com
|
அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள்
இங்கு சுட்டவும்
|
தேவதையைக் காண்பாயோ?
பாடு கின்ற
பாடலிலும்
பாவை வரும் பாதையிலும்
தேடு கின்ற தேவிமுகம்
தோன் றியெனைக் கொல்கிறதே! - நிதம்
தோன் றியெனைக் கொல்கிறதே!
கூவு கின்ற கருங்குயிலே,
கூத் தாடும் மயிலழகே!
தேவ தையைக் கண்டாலே
தேடு வதைச் சொல்வீரோ? - நான்
தேடு வதைச் சொல்வீரோ?
சூடு கின்ற மலர்சரமே,
சுழ லுகின்ற அலைக்கரமே
ஓடு கின்ற காலமிதை
உணர்ந் திடவே சொல்வீரோ? - அவள்
உணர்ந் திடவே சொல்வீரோ?
அல்லி யவள் செவ்வாயின்
அமிழ் தனையச் சொல்லெல்லாம்
புல்லி னிதழ் மேலான
பனித் துளியாய்ப் போனதடி! - வெண்
பனித் துளியாய்ப் போனதடி!
கனவி னிலும் அவளுருவே
காணு கின்ற காட்சியென,
நினைவி னிலே நிழலாடி
நெஞ் சமதே தொலைந்ததடி! -என்
நெஞ் சமதே தொலைந்ததடி!
நன்றி
இராஜ.தியாகராஜன் |
இராஜ.தியாகராஜன் அவர்களின் இதர படைப்புகள் |
|
விருந்தினர் பதிவேடு |
இந்த வலைத்தளம் பற்றிய
உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள்
கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட
உதவியாக இருக்கும்.
நன்றி. |
உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள்
விரைவில். |
இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள்
|
|
|