Home விருந்தினர் பதிவேடு Wallpapers About Us Contact Us Contact Us

New World      Jokes     Quotes     Computer Tips & Tricks       Earn Money Online     Collections 4 U

நகைச்சுவை
கவிதை
சிறுகதை

பொன்மொழி

கட்டுரை

பொது அறிவு

பாப்பா பாடல்கள்

உங்கள் கருத்து

தொடர்புக்கு

படைப்பாளர்கள்
தெனாலிராமன் கதை

தமிழ் தோட்டம் ஆரம்பித்த நாள்

01-03-2006

புதிப்பிக்கப்பட்ட நாள்

 February 20, 2010

Locations of visitors to this page
பார்வையாளர்கள் வந்த பாதை

உங்கள் பார்வை எண்

click tracking
 

இத் தமிழ்த்தோட்டத்தில் உங்கள் நகைச்சுவைள் - தொகுப்பு வெளிவரவேண்டுமெனில்,

ி ...

ி ி ி....

உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி  

................................................................................................................

tamilparks

@

gmail.com

................................................................................................................

அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள் இங்கு சுட்டவும்

(அவள் இறப்பாளென்று தெரியாமல் ஓட்டிய) மிதிவண்டி!

 

 


அரைபெடல் அடித்தே
உலகம் சுற்றிய காலமது!

விழுந்து முட்டி உடைந்த
பல தடவைக்குப் பிறகும் –
மிதிவண்டி ஆசை விட்டதேயில்லை!

அப்பாவின் –
பழைய ராலி சைக்கிள் தாண்டி
BSA SLR கனவு மிதிவண்டியாகவே
கடந்துவிட்டது வாழ்க்கை!

நானும் அண்ணனும்
ஊர் ஊரை சுற்றியதும்;

என் ஒரே தங்கை
இறந்துப் போவாளென்று தெரியாமல்
அவளை மிதிவண்டியில் ஏற்றிச் செல்லாததும்;

அப்பா மிதிவண்டி ஒட்டி மூச்சிரைக்க
நான் வாங்கி ஒட்டியதும்;

பள்ளி விட்டு வரும் அவளை பார்ப்பதற்காக
எட்டுப் பத்து மைல் தூரத்தை
கால்-அரை மணிநேரத்தில் –
வியர்க்க வியர்க்க ஓட்டிக் கடந்ததும்;

எங்கள் வீட்டு ஜூலி
எகுறி எகுறி – என் மிதிவண்டியின் வேகத்திற்கு
தெருமுனை வரை நாலுகால் பாய்ச்சலில் வந்து
வழியனுப்பி விட்டுச் சென்றதும்;

எத்தனையோ முறை பஞ்சர் போட பணமில்லாமல்
பணமிருந்தால் கடையில்லாமலும் -
எங்கெங்கிருந்தோ மிதிவண்டி தள்ளிக் கொண்டு
வீடு வரை நடந்து வந்ததும்;

அடிக்காத பெல்லும்
கட்டை தேய்ந்து பிடிக்காத ப்ரேக்கும்
கழட்டி தூக்கி எறியத் தோணாத டைனமோவும்
செயின் கழன்று கழன்றும் வரும் மிதிவண்டியில்
அவசர அவசரமாய் வேலைக்குப் போனதும்;

ஓர் நாள் திடீரென
தங்கை இறந்துவிட்ட சேதி கேட்டு –
நானும் தம்பியும்
அழுகை மீறி; மிதிவண்டியோட்ட திராணி போதாது
மிதிவண்டியை தெருவிலேயே போட்டுவிட்டு
இறங்கி – கத்தி – கதறிக் கொண்டே
ஓடி வருகையில் –

என் தம்பி மட்டும் ஒரு நிமிடம் நின்று
தெருவில் –
அனாதையாய் சாய்ந்துக் கிடந்த மிதிவண்டியை
பார்த்த பார்வையின் நினைவுகள் –
இதயத்தில் –
கோடு கோடுகளாய் .. கோடு கோடுகளாய்
நீள்கின்றன!


 

நன்றி

 

வித்யாசாகர்

வித்யாசாகர் அவர்களின் இதர படைப்புகள்

விருந்தினர் பதிவேடு

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள் விரைவில்.
இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள்

 

Home

[Fun World] [About India] [New World] [Friends Gift] [Baby World] [Kanyakumari] [IT PARK]

[Mobile Park] [Collections4U] [more]