சில
வாரங்களுக்கு முன்
அவர் வந்திருந்தார்
கனமான புத்தகத்துடன்
என்
அறையில் சிதறிக்கிடந்த
புத்தங்களில் மூன்றை
தேர்ந்தெடுத்தார்.
'படித்து விட்டீர்களா'
பதில் எதிர்பாராமல்
பேசவும் தொடங்கிவிட்டார்
கொண்டு வந்த
புத்தகத்தை பற்றி
'கண்டிப்பாக படித்துவிடுங்கள்'
விடைபெறும் போதும்
சில
நாட்கள் சென்றபின்
தேநீர் நிலையத்தில் சந்தித்தோம்
'படித்து விட்டீர்களா'
இப்பொழுதும்
பதில் எதிர்பார்க்கவில்லை
பேச தொடங்கிவிட்டார்
கொடுத்த புத்தகத்தை பற்றி
பிரிகையில்
'நாளை மறுநாள் வரேன், பேசுவோம்'
என்னவென்று
உங்களுக்கும் எனக்கும்
தெரிந்தது தானே
இந்த வலைத்தளம் பற்றிய
உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள்
கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட
உதவியாக இருக்கும்.
நன்றி.
உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள்
விரைவில்.