Home விருந்தினர் பதிவேடு Wallpapers About Us Contact Us Contact Us

New World      Jokes     Quotes     Computer Tips & Tricks       Earn Money Online     Collections 4 U

நகைச்சுவை
கவிதை
சிறுகதை

பொன்மொழி

கட்டுரை

பொது அறிவு

பாப்பா பாடல்கள்

உங்கள் கருத்து

தொடர்புக்கு

படைப்பாளர்கள்
தெனாலிராமன் கதை

தமிழ் தோட்டம் ஆரம்பித்த நாள்

01-03-2006

புதிப்பிக்கப்பட்ட நாள்

 May 31, 2010

Locations of visitors to this page
பார்வையாளர்கள் வந்த பாதை

உங்கள் பார்வை எண்

click tracking
 

இத் தமிழ்த்தோட்டத்தில் உங்கள் நகைச்சுவைள் - தொகுப்பு வெளிவரவேண்டுமெனில்,

ி ...

ி ி ி....

உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி  

................................................................................................................

tamilparks

@

gmail.com

................................................................................................................

அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள் இங்கு சுட்டவும்

கிழித்தெறிந்த காகிதம்; காட்டினை அழித்தது!

 

ழுதி நிறைந்ததில் 
கவிதையானது - கதைகளானது - புத்தகமானது;
கிழித்து கிழித்து எரிந்ததில் -
குப்பையானது; காகிதம்! 
 
கண்ணீரில் மை தீட்டி,
எண்ணம் வார்த்ததில் கடிதமானது;
நினைவுகளை சுமந்து வந்ததில்
பொக்கிசமானது; காகிதம்!
 
கடவுளை பற்றி எழுதியதில் புனிதமானது
காலம் கடந்ததை எழுதி வரலாறானது
காலிடறி பட்டாலும் தொட்டுக் 
கும்பிடவைத்தது; காகிதம்! 
 
எரிந்ததில் சாம்பலானது
எழுதிவைக்க குறிப்பேடானது
நேரம் காலம் குறித்ததில் நாளேடானது
நேற்றையும் இன்றையையும் எழுதி வைத்ததில்
நாட்குறிப்பானது; காகிதம்!
 
வண்ணம் தீட்டியதில் ஓவியமானது -
கையொப்பமிட்டதில் காசோலையானது
அரசு -
அளவு குறித்து முத்திரை பதித்ததில்
பணமானது; காகிதம்!
 
நீதிமன்றதில் சட்டமானது
நீதிக்கதைகள் சொன்னதில் இதிகாசமானது
தவறு செய்தவனை தண்டிக்க சாட்சியானது
இன்றையினை எழுத்தாய் சுமந்து
நாளையின் வரலாற்றில் - சுவடுகளாய் மிஞ்சியது; காகிதம்!
  
காதலி கைபட்டதில் உயிருமானது  
காதலியின் உருவம் சுமந்து புகைப்படமானது
கல் மண் காற்று வானத்தின் விவரம் கூட
காகிதமே சொன்னது.
 
ஆக, இத்தனை ஆனதில்
எத்தனை அழிந்ததென்று
காகிதம் அறிந்திட
வாய்ப்பில்லை, ஆனால் -
 
மரங்களை அழித்து; காடு வளம் குலைத்து
மழையினை குறைத்து -
இயற்கையின் மொத்த அழிவிற்கும்
மறைமுகமாய் காரணமானது; காகிதமே! காகிதமே!!


 

பின்குறிப்பு: மகாத்மா காந்தி சொன்னாராம்

'இல்லாத எல்லோருக்கும் நம்மால் உடுத்த ஒரு சட்டையை கூட இனாமாய் கொடுத்துவிட முடியாது, எனினும், இரண்டு சட்டை போதுமான இடத்தில் ஆறு சட்டை வைத்துக் கொள்வதை தவிர்த்தால் - மீதம் நான்கு சட்டையானது 'தானே இல்லாதவர்க்கு போய் சேருமென்று! அதுபோல் - தேவைக்கு மீறிய காகிதத்தின் பயன்பாட்டை தவிர்ப்போம்; அல்லது 'காகிதம் தானே' என்று குப்பையில் எரிவதை குறைப்போம்; மரம் தானே மிஞ்சும்!

 

நன்றி

 

வித்யாசாகர்

வித்யாசாகர் அவர்களின் இதர படைப்புகள்

விருந்தினர் பதிவேடு

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள் விரைவில்.
இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள்

 

Home

[Fun World] [About India] [New World] [Friends Gift] [Baby World] [Kanyakumari] [IT PARK]

[Mobile Park] [Collections4U] [more]