Home விருந்தினர் பதிவேடு Wallpapers About Us Contact Us Contact Us

New World      Jokes     Quotes     Computer Tips & Tricks       Earn Money Online     Collections 4 U

நகைச்சுவை
கவிதை
சிறுகதை

பொன்மொழி

கட்டுரை

பொது அறிவு

பாப்பா பாடல்கள்

உங்கள் கருத்து

தொடர்புக்கு

படைப்பாளர்கள்
தெனாலிராமன் கதை

தமிழ் தோட்டம் ஆரம்பித்த நாள்

01-03-2006

புதிப்பிக்கப்பட்ட நாள்

 November 17, 2009

Locations of visitors to this page
பார்வையாளர்கள் வந்த பாதை

உங்கள் பார்வை எண்

click tracking
 

இத் தமிழ்த்தோட்டத்தில் உங்கள் நகைச்சுவைள் - தொகுப்பு வெளிவரவேண்டுமெனில்,

ி ...

ி ி ி....

உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி  

tamilparks

@

gmail.com

அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள் இங்கு சுட்டவும்

காரணப்பெயர்

 

அப்பாவிடம் ஒரு நிலம் இருந்தது!
"பெரியனஞ்சை" என்று பெயர்!
பெரியனஞ்சைக்கு பிறகே
அம்மாவை பிடிக்கும் அப்பாவிற்கு.
கிணறு வெட்டி, கரும்புவளர்த்து,
கடலை நட்டு,கத்திரி பயரிட்டு,
தசை நார் தெறிக்கும் அப்பாவை
அறிவேன் வயலில்!
கொண்டுசெல்லும் கஞ்சி ஊறுகாயின்
மண்டிநீரையும் வயலில் உமிழ்வார்
ப்ரியம் பொங்க.
ஒரு நாள்,ஒரு பொழுது
மழை ஏமாற்றியதில்லை அப்பாவை.
மழையும் அப்பாவும் ஒன்றுதான்
விரும்பி ஏமாற்றுவதில்லை!
காலத்தின் தேய்மானத்தில்
பெரியனஞ்சயை தோற்றார்
அப்பா ஒரு நாள்.
பிறகு....
அப்பா சாராயம் குடித்தார்,
வெங்காயகடை வைத்தார்,
திரையரங்கில் வேலை பார்த்தார்,
யார் அழைத்தாலும்
போய் உழைத்தார்...
அவ்வளவு இடிபாடுகளுக்கிடையேயும்
இயங்கிக்கொண்டே இருக்க
ஐந்து காரணங்கள்
இருந்தது அப்பாவிற்கு...
எங்கள் ஊரில்
நிலங்களுக்கு பெயர்
இருந்ததுபோல்
காரணங்களுக்கும்
பெயர் இருந்தது...
அது.....
சுமதி
புனிதா
ராஜா
தேவி
இந்திரா!...

 

 

நன்றி

பா. ராஜாராம்

பா. ராஜாராம் அவர்களின்  இதர படப்புகள்

விருந்தினர் பதிவேடு

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள் விரைவில்.
இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள்

 

Home

[Fun World] [About India] [New World] [Friends Gift] [Baby World] [Kanyakumari] [IT PARK]

[Mobile Park] [Collections4U] [more]