Home விருந்தினர் பதிவேடு Wallpapers About Us Contact Us Contact Us

New World      Jokes     Quotes     Computer Tips & Tricks       Earn Money Online     Collections 4 U

நகைச்சுவை
கவிதை
சிறுகதை

பொன்மொழி

கட்டுரை

பொது அறிவு

பாப்பா பாடல்கள்

உங்கள் கருத்து

தொடர்புக்கு

படைப்பாளர்கள்
தெனாலிராமன் கதை

தமிழ் தோட்டம் ஆரம்பித்த நாள்

01-03-2006

புதிப்பிக்கப்பட்ட நாள்

 February 20, 2010

Locations of visitors to this page
பார்வையாளர்கள் வந்த பாதை

உங்கள் பார்வை எண்

click tracking
 

இத் தமிழ்த்தோட்டத்தில் உங்கள் நகைச்சுவைள் - தொகுப்பு வெளிவரவேண்டுமெனில்,

ி ...

ி ி ி....

உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி  

.............................................................................................

tamilparks

@

gmail.com

.............................................................................................

அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள் இங்கு சுட்டவும்

குறுங்கவிதைகள்

 

 


வானம் தொடாத
சிறகொன்று -
காற்றில் அலைந்து அலைந்து திரிந்ததில்
வெளியில் தெரியாத -
நிறைய முகங்கள்
வந்து வந்து களைகின்றன!
-------------------------------------------------------

எங்கோ ஒரு
சாவு மேளத்தின் சப்தம்
தொலைவிலிருந்து -
கேட்டுக் கொண்டு தானிருக்கிறது
நிறைய அழுகுரல்களையும்
மரணத்தின் வாசத்தையும்
விழுங்கிவிட்டு!
-------------------------------------------------------

என் -
கழுத்திலிருக்கும்
தங்க சங்கிலியும்
கைவிரல் மோதிரமும் காப்பும்
எத்தனையோ ஏழை பெண்களுக்கு
கிடைக்காத தாலியை -
நினைவுபடுத்தாமலில்லை!
-------------------------------------------------------

நிறைய வீடுகளில்
மின்விளக்கும்
மின்விசிறியும்
வெட்டியாய் எரிந்துக் கொண்டும்
இயங்கிக் கொண்டும் தானிருக்கிறது
வேறுசில வீட்டின் -
வெளிச்சத்தைத் திருடிக்கொண்டு!
-------------------------------------------------------

சரியில்லை எனத் தெரிந்தும்
அறுத்தெறிய மறுக்கிறது
பல மடமைகளை -
என் மூதாதையர் வளர்த்த
புத்தி!
-------------------------------------------------------

காசு கொடுத்து
வாங்க இயலாத
பொருள்களிலிருந்து தான்
பூக்கிறது கனவு -
வாங்கிய பொருள்களின் ஆசை தீர்ந்த
சலிப்பிற்கிடையேயும்!
-------------------------------------------------------

இன்னும் -
நிறைய மண்
மாளிகையாகாமலும்,

நிறைய துணிகள்
நெய்யப் படாமலும்,

மனிதர்கள் -
நிறையப் பேர்
பக்குவப் படாமலும் தான்
சுற்றுகிறது பூமி!
-------------------------------------------------------

கால நேர
சம்பிரதாயம் பார்பவர்கள்
வீட்டிலும் -
பிணங்கள் விழாமலில்லை!

-------------------------------------------------------

 

நன்றி

 

வித்யாசாகர்

வித்யாசாகர் அவர்களின் இதர படைப்புகள்

விருந்தினர் பதிவேடு

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள் விரைவில்.
இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள்

 

Home

[Fun World] [About India] [New World] [Friends Gift] [Baby World] [Kanyakumari] [IT PARK]

[Mobile Park] [Collections4U] [more]