கம்பி வலையில்,
கொள்ளை லாபம்,
டாஸ்மார்க்...
அரசாங்கம் நடத்தும்,
உயிர் கொல்லி மருந்து,
டாஸ்மார்க்...
இறந்த பின்,
ஆறடி நிலம் வாங்கினேன்,
டாஸ்மார்க்..................
மனைவியின் தாலி,
மதுவில் காலி,
டாஸ்மார்க்...
திடமாக இருந்தவன்,
திரவம் அருந்தி,
வாயுவானான்,
மரணத்தை தழுவி .....
நாட்டுக்கு வருவாய்,
வீட்டுக்கு செலவாய்,
டாஸ்மார்க் ...
சிறு துளி நாவில் பட்டு,
பெரு வெள்ளத்தில் மூழ்கியது,
வீடு,
டாஸ்மார்க்...
இடைவேளை இல்லா, திரைபடத்தில் ,
நிரம்பி வழியும் ரசிகர் கூட்டம் ,
டாஸ்மார்க்...
விவேகானந்தர் கூற்று,
விரைந்து வா, விடியலை நோக்கி,
டாஸ்மார்க் போதை தெளிந்த பின் .......