Home விருந்தினர் பதிவேடு Wallpapers About Us Contact Us Contact Us

New World      Jokes     Quotes     Computer Tips & Tricks       Earn Money Online     Collections 4 U

நகைச்சுவை
கவிதை
சிறுகதை

பொன்மொழி

கட்டுரை

பொது அறிவு

பாப்பா பாடல்கள்

உங்கள் கருத்து

தொடர்புக்கு

படைப்பாளர்கள்
தெனாலிராமன் கதை

தமிழ் தோட்டம் ஆரம்பித்த நாள்

01-03-2006

புதிப்பிக்கப்பட்ட நாள்

 March 25, 2009

Locations of visitors to this page
பார்வையாளர்கள் வந்த பாதை

உங்கள் பார்வை எண்

click tracking
 

இத் தமிழ்த்தோட்டத்தில் உங்கள் நகைச்சுவைள் - தொகுப்பு வெளிவரவேண்டுமெனில்,

ி ...

ி ி ி....

உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி  

tamilparks

@

gmail.com

அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள் இங்கு சுட்டவும்

ஆடை இருந்தும் அம்மணமாய்.....!

 


மிருகக்காட்சிசாலை அது

கூண்டுக்குள் காட்சிப்பொருளாய்
கூச்சத்தோடு மிருகங்கள்
வரிசையில் ஆர்வமாய்
வந்துசெல்லும் மனிதர்கள்

சிங்கம்
சுற்றத்தை அடக்கி ஆளும் - அதன்
சொந்தங்களை சேர்த்து வாழும்

நரி
அண்டி ஒண்டிப் பிழைக்கும் - கூடவே
இருந்து குழியும் பறிக்கும்

பாம்பு
பார்த்தால் பயந்ததுபோல ஓடும் - அதன்
நாக்கினில் விசமும் இருக்கும்

நாய்
நன்றியோடு இருக்கும் - சமயத்தில்
நல்லவரையும் கடிக்கும்

குயில்
சொந்த வீடில்லாத ஏக்கத்தை -அதன்
சோகக் குரலில் காட்டும்

யானை
எளிமையாய் இருக்கும் - ஆனாலும்
அதற்கு மதமும் பிடிக்கும்

குரங்கு
குட்டிச் சேட்டைகள் செய்யும் _ அசந்தால்
இருப்பதைப் பிடுங்கித் திண்ணும்

பூனை
கண்களை மூடிக்கொள்ளும் _ உலகமே
இருண்டதாய் எண்ணிக்கொள்ளும்

நெருப்புக்கோழி
தரைக்குள் தலை நுழைக்கும் _ தான்மட்டும்
தப்பியதாய் நினைத்துக்கொள்ளும்

ஐந்தறிவு விலங்குகள் ஒவ்வொன்றிற்கும்
அதற்கென தனித்தனியே சிறப்புக்குணங்கள்

ஆறறிவு மனிதன் நம்மிடம்
அப்படி என்ன சிறப்பு குணம்?

அட,ஆச்சரியமாய் உணர்கிறேன்!
அனைத்து குணங்களும் என்னிடமும்
அப்படியே மாறாமல் இருக்கின்றன!!

ஒருநிமிடம் எனக்குள் யோசிக்கிறேன்
மறுநிமிடம் அதிர்ச்சியாகி நிற்கிறேன்
"மிருகங்களின் மொத்த கலவையா நான்!
குறிப்பிட்டுச் சொல்ல எனக்கென
சிறப்புக்க்குணம் ஏதும் இல்லையா?"

கட்டணம்கட்டி வந்தேன் மிருகக்காட்சிசாலை!
நட்டநடுவில் காட்சிப்பொருளாய் நிற்கிறேன்!!
அனைத்து மிருகங்களும் பார்த்துகொண்டிருக்கின்றன
என்னை இப்போது இலவசமாக!!!

அத்தனைக் கண்களுக்கும் முன்னால்
ஆடையோடு இருந்தாலும் நான்
அம்மணமாய் உணர்கிறேன்

 

அன்புடன் துரை, தூத்துக்குடி

 

துரை, தூத்துக்குடி  -ன் இதர படப்புகள்

விருந்தினர் பதிவேடு

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள் விரைவில்.
இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள்

 

Home

[Fun World] [About India] [New World] [Friends Gift] [Baby World] [Kanyakumari] [IT PARK]

[Mobile Park] [Collections4U] [more]