பிரிந்தே இருக்கிறேன்
பிரிந்தே இருக்கிறேன்
நண்பர்களா நாம்,
நண்பர்களாய்ப் பிரிய.
எதிரிகளா நாம்,
பகைமையில் புரள.
நம்மில் எவரும் -
கடவுளா,
கல்லாய் சமைந்திட.
மனிதரா,
உள்ளதை மறைக்க.
மிருகமா,
மறைக்காமல் விட்டிட.
நானுன் பாரத்தனா,
பாதியாய் அமைந்திருக்க.
உரிமையுற்றவனா,
பெருமையில் பொங்கிட.
உரிமையற்றவனா.
பொறாமையில் புழுங்கிட.
ஒன்றும் ஒன்றும்,
ஒன்றும்தான்.
ஒன்றல்ல.
உன்னில் நான்
என்னில் நீ
உண்மையில் யார்?
விக்கிரமனுக்கில்லா
விடைதெரியாக் கேள்வி
மீண்டும் வேண்டாம்..
உன்னில்
பிரிவே
'பிரேமை' யெனில்
பிரிந்தே
இருக்கிறேன்.
கண்ணபிரான்.G
|