|
|
இத்
தமிழ்த்தோட்டத்தில்
உங்கள்
நகைச்சுவைகள் - தொகுப்பு வெளிவரவேண்டுமெனில்,
உங்கள்
படைப்புகளை
எழுதி
அனுப்புங்கள்...
அவை
இலவசமாக
தமிழ்த்
தோட்டதில்
வெளிவரும்....

உங்கள்
படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
.............................................................................................
tamilparks
@
gmail.com
.............................................................................................
|
அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள்
இங்கு சுட்டவும்
|
சிருங் கவிதைகள்
என்
எழுதுகோலை
பிடுங்கிக் கொள்வதாய்
எதிரே நின்று -
நிறைய பறவைகள் கத்துகின்றன;
என்னை பற்றியும்
எழுது - என்கின்றனவா,
என்னிடம் -
பாடம் கேள் என்கின்றனவா
புரியவில்லை!
----------------------------------------
மரமும்
-
செடியுமென் ஜாதியென
நினைக்கும் நான் -
தெருவில் ஆங்காங்கே
பட்டுப் போகும் -மரத்திற்கான சோகத்தை
ஏனென்று கேட்பதேயில்லை!
----------------------------------------
மனிதனை
மனிதன்
வெட்டினால் -
தெருவில் போகும்
நாய் கூட குறைக்கிறது;
எதிர் வீட்டிலிருப்பவன் -
மரங்களை வெட்டினான்.
ஒன்றை கூட என்னால்
தடுக்க முடியவில்லை!
----------------------------------------
பூக்கள்
ஆயிரம்
பூக்கின்றன;
ஒருசில பூக்களே
நுகரப் படுகின்றன!
-----------------------------------------
மனிதன்
-
நினைத்துக் கொண்டான்
அவன் தலைக்குச் சூடிய
பூவும்,
பூஜைக்கு வைத்த மலர்களும்
பேருகொண்டதாய்;
பூக்கள் -
நினைத்துக் கொண்டன
மனிதன் பறித்த பூவும்
கிள்ளி -
மாலையில் தொடுத்த மலர்களும்
இறந்துப் போனதாய்!
-----------------------------------------
நன்றி
வித்யாசாகர் |
வித்யாசாகர் அவர்களின் இதர படைப்புகள் |
|
விருந்தினர் பதிவேடு |
இந்த வலைத்தளம் பற்றிய
உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள்
கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட
உதவியாக இருக்கும்.
நன்றி. |
உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள்
விரைவில். |
இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள்
|
|
|