Home விருந்தினர் பதிவேடு Wallpapers About Us Contact Us Contact Us

New World      Jokes     Quotes     Computer Tips & Tricks       Earn Money Online     Collections 4 U

நகைச்சுவை
கவிதை
சிறுகதை

பொன்மொழி

கட்டுரை

பொது அறிவு

பாப்பா பாடல்கள்

உங்கள் கருத்து

தொடர்புக்கு

படைப்பாளர்கள்
தெனாலிராமன் கதை

தமிழ் தோட்டம் ஆரம்பித்த நாள்

01-03-2006

புதிப்பிக்கப்பட்ட நாள்

 June 02, 2010

Locations of visitors to this page
பார்வையாளர்கள் வந்த பாதை

உங்கள் பார்வை எண்

click tracking
 

இத் தமிழ்த்தோட்டத்தில் உங்கள் நகைச்சுவைள் - தொகுப்பு வெளிவரவேண்டுமெனில்,

ி ...

ி ி ி....

உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி  

................................................................................................................

tamilparks

@

gmail.com

................................................................................................................

அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள் இங்கு சுட்டவும்

ஒரு தமிழனின் கனவு!!

 

விடுதலையின் 
வேட்கையில் 
ஒவ்வொன்றாய் உதிர்கிறது
ஈழ உயிர்ப்புகள்;
 
ஆயினும் -
வெல்வோமெனும் திடத்தில்
தோற்றிடவில்லை ஒரு
உலகத்
தமிழரும்!
---------------------------------------------------
 
ண்ணன் தம்பி
அம்மா அப்பா
பிள்ளை மனைவி
யாரையும் இழந்த
எம் உறவுகள் -
ஈழத்தை இழக்க மட்டும்
தயாரில்லை!
---------------------------------------------------
 
சுவாசத்தில் சுதந்திரம்
கேட்டு -
வாழ்தலுக்கு ஒரு
ஈழம் கேட்டுத் தானே
இத்தனை போராட்டமென
அறுபது வருடம் தாண்டியும்
புரிந்துக் கொள்ள வில்லை
உலகம்!
---------------------------------------------------
 
கைவீசி நடந்த அதே
தெருவில் -
கைகால் முடமாக்கப் பட்டு
கிடக்கிறேன் -
பரவாயில்லை;
எக்காரணம் கொண்டும் எம்  
விடுதலை உணர்வை
முடமாக்கிக் கொள்ளாதீர்கள்
உறவுகளே!
---------------------------------------------------
 
நெல்மணிக்கும்
தேயிலைக்கும்
விவசாயம் பார்த்த
தமிழனமே; வாருங்கள்
ஊரெல்லாம் உறைந்துக் கிடக்கும்
ரத்தத்தில் -
எந்த உயிர் யாருடையதெனப்
பார்ப்போம்.
 
ஒருவேளை அது -
என்னுடையதாய் இருந்தால் 
மீண்டுமென்னை உயிர்பித்து விடுங்கள் 
ஈழம் வெல்லும் வரை மட்டும்! 
---------------------------------------------------
 
லக தமிழினங்களே
வாருங்கள் -
ஒரு வாரம்
ஈழத்தில் தங்கி
இறந்த போராளிகளின்
உடம்பு கறி கிடைக்கும்
தின்று விடுதலை உணர்வை
மீட்டுக் கொள்ளுங்கள்!
---------------------------------------------------
 
குண்டு வெடி
சப்தத்திற்கோ
பீரங்கியில் சிதைந்து போகும்
மரணத்திற்கோ
பயமில்லை;
 
இறந்து கொண்டிருப்பது
வெறும் போராளிகள் மட்டுமல்ல
எங்களின் நம்பிக்கையுமென்பதே
பயம்!
---------------------------------------------------
 
றந்தவர்களுக்கு
இறந்த பின்பும்
நிறைய கடிதங்கள்
எழுதப் படுகின்றன;
 
பதிலாய் வரும்
அத்தனை கடிதத்திலும்
ஒற்றை சொல்லே
வருகிறது; மீண்டும் மீண்டும்
போராடுங்கள்..
போராடுங்கள்..
 ---------------------------------------------------
 
துவரை
வீடிழந்து
நாடிழந்து
விடுதலை தேடி திரியும்
எம் உறவுகளே;
உயிரை
யாருக்கு வேண்டுமாயினும்
விட்டுவிடுங்கள்;
விடுதலை உணர்வை -
ஈழத்திற்கு மட்டுமாய்
மிச்சம் வையுங்கள்!
---------------------------------------------------
 
த்தம் ஊறிய
மண்ணில் ஓர் தினம்
புலிக்கொடி -
பட்டொளி வீசிப்
பறக்கும்;
 
இது கனவென்று 
நினைக்கிறார்கள் சிலர்;
 
ஆம் கனவு தான்
தமிழனின் கனவு!! 
-----------------------------------------

 

நன்றி

 

வித்யாசாகர்

வித்யாசாகர் அவர்களின் இதர படைப்புகள்

விருந்தினர் பதிவேடு

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள் விரைவில்.
இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள்

 

Home

[Fun World] [About India] [New World] [Friends Gift] [Baby World] [Kanyakumari] [IT PARK]

[Mobile Park] [Collections4U] [more]