Home விருந்தினர் பதிவேடு Wallpapers About Us Contact Us Contact Us

New World      Jokes     Quotes     Computer Tips & Tricks       Earn Money Online     Collections 4 U

நகைச்சுவை
கவிதை
சிறுகதை

பொன்மொழி

கட்டுரை

பொது அறிவு

பாப்பா பாடல்கள்

உங்கள் கருத்து

தொடர்புக்கு

படைப்பாளர்கள்
தெனாலிராமன் கதை

தமிழ் தோட்டம் ஆரம்பித்த நாள்

01-03-2006

புதிப்பிக்கப்பட்ட நாள்

 June 02, 2010

Locations of visitors to this page
பார்வையாளர்கள் வந்த பாதை

உங்கள் பார்வை எண்

click tracking
 

இத் தமிழ்த்தோட்டத்தில் உங்கள் நகைச்சுவைள் - தொகுப்பு வெளிவரவேண்டுமெனில்,

ி ...

ி ி ி....

உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி  

tamilparks

@

gmail.com

அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள் இங்கு சுட்டவும்

துளிப்பா

ஈழத்தில் நடந்தது இனப் படுகொலை
ஈவு இரக்கமற்ற கொடூரக் கொலை
வாழ வழியின்றி முள்வேலி
வாடி வதங்கினர் குழந்தைகள்
இழவை கேட்க நாதியில்லை


 

உலக மகா கொடூர கொலைக்காரன்
உலக வலம் நாளும் வருகிறான்
உலக நாடுகள் மன்றத்தான் வேடிக்கை பார்க்கிறான்
ஒருவரும் தட்டி கேட்கவில்லை
பலகாலம் ஏமாற்றி வாழ்கிறான்


 

மூட நம்பிக்கைகளில் ஒன்றானது தேர்தல்
மேதினியில் பணம் படைத்தவர்களே வேட்பாளர்கள்
மடயர்கள் மலிந்து விட்டனர்
மூளைக்கு வேலை இல்லை
அட பணம் வாங்கி வாக்களிக்கிறார்கள்.


 

போட்டி போட்டன தொலைக்காட்சிகள்
பெண்களை அழ வைத்துப் பார்ப்பதில்
ஏட்டிக்குப் போட்டி மாமியார்கள்
ஏதிர் தாக்குதலில் மருமகள்கள்
ஈட்டிக்காரனைத் தோற்கடித்தனர் சண்டையில்


 

பட்டுச்சேலை ஆசையை விட்டு விடு
பாவம் பட்டுப்பூச்சிகளை வாழ விடு
பட்டு மேனியாளுக்கு தேவையில்லை பட்டு
துட்டு அதிகம் முடங்கி விடுகின்றது
கட்டு கைத்தறி சேலை தினம் கட்டு


 

பொன் நகை மோகம் மலிந்தது
பெண்கள் பலரது மனமும் அடிமையானது
விண்ணை எட்டியது விலை உயர்ந்தது
வஞ்சியர் இனம் கடையில் குவிந்தது
ஆண்கள் இனம் அவதிப்பட்டது


 

கோடிகளை உதியம் பெறுகிறான் நடிகன்
கோடம்பாக்கத்து கோமகனாய் வலம் வருகிறான்
கொடி கட்டி பொழுதுபோக்குகின்றான் ரசிகன்
கட் அவுட்டிறிகு அபிஷேகம் செய்கிறான்
தடியால் அடி வாங்கி காயமும் படுகிறான்


 

தமிழர்களின் கலைகளை பறைசாற்றிடும் சிலை
பார்த்தவர்கள் வியப்பில் ஆகின்றனர் சிலை
இமி அளவும் இல்லை அதில் செயற்கை
இமைக்காமல் ரசித்து அடைந்தனர் இன்பம்
சாமி நம்பாதவரும் வியப்படைந்த நிலை


 

நடிகையை சேர்த்தனர் அரசியல் கட்சியில்
நல்லவர்கள் விலகி விட்டனர் அரசியலில்
கோடிகள் குவிக்க வாய்ப்பு வழங்கினார்கள்
கட்சியில் மேல்சபை பதவியும் தருவார்கள்
கேடிகள் பல்கிப் பெருகி விட்டார்கள்


ஆண் மான் குடிக்கட்டும் என்று பெண் மான்
பெண் மான் குடிக்கட்டும் என்று ஆண் மான்
இன்பக் காட்சி தமிழ் இலக்கியத்தில் காண்
இணை பிரியாத ஜோடிகளின் காதல்
எண்ணிலடங்காத இனிய உணர்வு தான்

 

.........................................................................................

 

நன்றி

 

கவிஞர் இரா. இரவி, மதுரை

கவிஞர் இரா. இரவி, மதுரை அவர்களின் இதர படைப்புகள்

விருந்தினர் பதிவேடு

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள் விரைவில்.
இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள்

 

Home

[Fun World] [About India] [New World] [Friends Gift] [Baby World] [Kanyakumari] [IT PARK]

[Mobile Park] [Collections4U] [more]