Home விருந்தினர் பதிவேடு Wallpapers About Us Contact Us Contact Us

New World      Jokes     Quotes     Computer Tips & Tricks       Earn Money Online     Collections 4 U

நகைச்சுவை
கவிதை
சிறுகதை

பொன்மொழி

கட்டுரை

பொது அறிவு

பாப்பா பாடல்கள்

உங்கள் கருத்து

தொடர்புக்கு

படைப்பாளர்கள்
தெனாலிராமன் கதை

தமிழ் தோட்டம் ஆரம்பித்த நாள்

01-03-2006

புதிப்பிக்கப்பட்ட நாள்

 March 03, 2010

Locations of visitors to this page
பார்வையாளர்கள் வந்த பாதை

உங்கள் பார்வை எண்

click tracking
 

இத் தமிழ்த்தோட்டத்தில் உங்கள் நகைச்சுவைள் - தொகுப்பு வெளிவரவேண்டுமெனில்,

ி ...

ி ி ி....

உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி  

................................................................................................................

tamilparks

@

gmail.com

................................................................................................................

அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள் இங்கு சுட்டவும்

எவரேனும் இப்படி காதலித்ததுண்டா 1

 

 


மனதில்
நிறைய வைத்துக் கொண்டு
தானே -
ஒன்றுமில்லை ஒன்றுமில்லை
என்கிறாய்;

என்ன வைத்திருக்கிறாயென
எனக்குத்
தெரியாவிட்டாலென்ன

உனக்குத் தெரிந்தால்
போதும்!
-----------------------------------------------

தெருவில் நீ
நடந்து செல்கிறாய்;

நானும் -
நடந்துச் செல்கிறேன்;

பார்ப்பவர்கள்
நினைத்துக் கொள்கிறார்கள்
நீயும் நானும்
யார் யாரோவென்று;

உனக்கும் எனக்கும் தானேத்
தெரியும் -
நீயும் நானும்
யார் யாரென்று!
-----------------------------------------------

உன் -
முட்டைக் கண்
பார்வையால் -
நெட்டை கால் விரித்து
உயிர் கொண்டுவிட்டது
நமக்கான காதல்!
-----------------------------------------------

நீ -
ஒருமுறை
கை குலுக்கிய
அந்த இறுக்கத்தின்
அழுத்தத்தில் தான்
இதயம் -
எழுந்து நின்று செய்தது
காதல்!
-----------------------------------------------

எங்கோ -
தூரத்தில் வரும்போதே
உன்னை பார்த்துவிடுவேன்;

நீயும் -
பார்த்துவிடுவாய்;

அருகில் வந்ததும்
பார்க்காதவர்களைப் போலவே
சென்றுவிடுவோம்;

உன்னை நானும்
என்னை நீயும்
கடந்தப் பிறகு - சடாரென
இருவரும் -
திரும்பிப் பார்க்க நினைப்போம்;

திரும்பிப் பார்க்காமலேயே
செல்வோம்.

காதல் -
செந்தீயென
இருவருக்குள்ளும் எரியும்!
-----------------------------------------------

நான் -
வாசலில் நின்றிருப்பேனென
உனக்குத் தெரியும்;

நீ -
வீட்டிற்குள் நின்று
எனக்காகக் -
காத்திருப்பாயென
எனக்கும் தெரியும்;

தெரிந்தும் -
நான் காத்திருக்கட்டுமேயென
நீ -
வீட்டிற்குள்ளேயே இருப்பாய்;

வெளியே -
ஊர் எனை மட்டும்
கிறுக்கனென சொல்லி
காரி உமிழ்ந்துப் போகும்
நம் காதலை!
-----------------------------------------------

உனக்கும்
எனக்கும்
திருமணமாகிவிட்டது;
குழந்தைகளும் உண்டு

பல வருடங்களுக்குப் பின்
இன்று ஏனோ -
நேருக்கு நேர்
பார்க்க நேர்ந்ததில் -
நம் குழந்தைகளையும்
குடும்பத்தையும்
மறந்து தான் போனது நம்
பார்வை!

-----------------------------------------------

 

நன்றி

 

வித்யாசாகர்

வித்யாசாகர் அவர்களின் இதர படைப்புகள்

விருந்தினர் பதிவேடு

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள் விரைவில்.
இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள்

 

Home

[Fun World] [About India] [New World] [Friends Gift] [Baby World] [Kanyakumari] [IT PARK]

[Mobile Park] [Collections4U] [more]