|
|
இத்
தமிழ்த்தோட்டத்தில்
உங்கள்
நகைச்சுவைகள் - தொகுப்பு வெளிவரவேண்டுமெனில்,
உங்கள்
படைப்புகளை
எழுதி
அனுப்புங்கள்...
அவை
இலவசமாக
தமிழ்த்
தோட்டதில்
வெளிவரும்....

உங்கள்
படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
................................................................................................................
tamilparks
@
gmail.com
................................................................................................................
|
அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள்
இங்கு சுட்டவும்
|
எவரேனும் இப்படி காதலித்ததுண்டா
1
மனதில்
நிறைய வைத்துக் கொண்டு
தானே -
ஒன்றுமில்லை ஒன்றுமில்லை
என்கிறாய்;
என்ன வைத்திருக்கிறாயென
எனக்குத்
தெரியாவிட்டாலென்ன
உனக்குத் தெரிந்தால்
போதும்!
-----------------------------------------------
தெருவில் நீ
நடந்து செல்கிறாய்;
நானும் -
நடந்துச் செல்கிறேன்;
பார்ப்பவர்கள்
நினைத்துக் கொள்கிறார்கள்
நீயும் நானும்
யார் யாரோவென்று;
உனக்கும் எனக்கும் தானேத்
தெரியும் -
நீயும் நானும்
யார் யாரென்று!
-----------------------------------------------
உன் -
முட்டைக் கண்
பார்வையால் -
நெட்டை கால் விரித்து
உயிர் கொண்டுவிட்டது
நமக்கான காதல்!
-----------------------------------------------
நீ -
ஒருமுறை
கை குலுக்கிய
அந்த இறுக்கத்தின்
அழுத்தத்தில் தான்
இதயம் -
எழுந்து நின்று செய்தது
காதல்!
-----------------------------------------------
எங்கோ -
தூரத்தில் வரும்போதே
உன்னை பார்த்துவிடுவேன்;
நீயும் -
பார்த்துவிடுவாய்;
அருகில் வந்ததும்
பார்க்காதவர்களைப் போலவே
சென்றுவிடுவோம்;
உன்னை நானும்
என்னை நீயும்
கடந்தப் பிறகு - சடாரென
இருவரும் -
திரும்பிப் பார்க்க நினைப்போம்;
திரும்பிப் பார்க்காமலேயே
செல்வோம்.
காதல் -
செந்தீயென
இருவருக்குள்ளும் எரியும்!
-----------------------------------------------
நான் -
வாசலில் நின்றிருப்பேனென
உனக்குத் தெரியும்;
நீ -
வீட்டிற்குள் நின்று
எனக்காகக் -
காத்திருப்பாயென
எனக்கும் தெரியும்;
தெரிந்தும் -
நான் காத்திருக்கட்டுமேயென
நீ -
வீட்டிற்குள்ளேயே இருப்பாய்;
வெளியே -
ஊர் எனை மட்டும்
கிறுக்கனென சொல்லி
காரி உமிழ்ந்துப் போகும்
நம் காதலை!
-----------------------------------------------
உனக்கும்
எனக்கும்
திருமணமாகிவிட்டது;
குழந்தைகளும் உண்டு
பல வருடங்களுக்குப் பின்
இன்று ஏனோ -
நேருக்கு நேர்
பார்க்க நேர்ந்ததில் -
நம் குழந்தைகளையும்
குடும்பத்தையும்
மறந்து தான் போனது நம்
பார்வை!
-----------------------------------------------
நன்றி
வித்யாசாகர் |
வித்யாசாகர் அவர்களின் இதர படைப்புகள் |
|
விருந்தினர் பதிவேடு |
இந்த வலைத்தளம் பற்றிய
உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள்
கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட
உதவியாக இருக்கும்.
நன்றி. |
உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள்
விரைவில். |
இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள்
|
|
|