|
|
இத்
தமிழ்த்தோட்டத்தில்
உங்கள்
நகைச்சுவைகள் - தொகுப்பு வெளிவரவேண்டுமெனில்,
உங்கள்
படைப்புகளை
எழுதி
அனுப்புங்கள்...
அவை
இலவசமாக
தமிழ்த்
தோட்டதில்
வெளிவரும்....

உங்கள்
படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
................................................................................................................
tamilparks
@
gmail.com
................................................................................................................
|
அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள்
இங்கு சுட்டவும்
|
எவரேனும் இப்படி காதலித்ததுண்டா
3
கல்லூரியின்
சுவரெங்கும்
காதலன் காதலியின் பெயர்கள்;
நம் பெயரில்லாத
இடத்திலிருந்து துளிர்க்கிறது
உன் பெயரையும் எழுதுவதற்கான
ஆசை;
உன்னை எழுதி ஏன்
அங்கு வைக்கவேண்டுமென;
எழுதாமலேயே வந்து விடுகிறேன்,
நான் கல்லூரியின் சுவர்களில்
எழுதிடாத உன் பெயர் - எனக்குள்
காதலாய்.. காதலாய்.. பூக்கிறது!
-----------------------------------------------------------------
நீயும்
நானும்
பேசிக் கொள்வதை
காற்று நம்மிடம்
சொல்வதேயில்லை;
போகட்டும்,
நாம் ஒன்றாக சேரும் தினத்தில்
கட்டி இறுக்கிய நம்
நெருக்கத்தினால் -
காற்றினை வெப்பம்கொள்ளச் செய்வோம்!
-----------------------------------------------------------------
காலம்
காலமாகத் தான்
காதலிக்கிறார்கள்;
நீயும்
நானும் மட்டும்
எப்படியோ -
எதிரியாகிப் போனோம்
ஜாதி மதப் பேய்களுக்கு!
-----------------------------------------------------------------
நெடுந்தூரம்
நடந்துவந்து
நெடிய நேரத்தை
கால்கீழ் மிதித்து மிதித்தெரிந்து
விட்டுத் தான் -
உனக்காகக் காத்திருந்தேன்;
இதோ இமைக்கும் பொழுதில்
என்னைக் கடந்து -
அதோ செல்கிறாய்;
நீ போகும் வேகத்திற்கென்
கண்ணீர் மொத்தமும்
சாரை சாரையாய் -
தெருவை நனைக்கையில்
உனக்கென்ன குறைந்துவிடும் -
நீ போ.. போ..
உன் மிதிபடலில்
என் காத்திருப்பு
குறைந்தொன்றும்விடாதென
நான் சொல்லியா உனக்குத்
தெரியவேண்டும்?
உனக்கெல்லாம்
தெரியுமென்பதில் தானே
மீண்டும் மீண்டுமாய்
வலிகளின் மீதேறி -
உயிர் பெருகிறதென் காதல்!
-----------------------------------------------------------------
ஒன்று செய்
நீயும் என்னை
நினைத்துக் கொண்டேயிரு
நானும் உன்னை
நினைத்துக் கொண்டேயிருக்கிறேன்;
குறுக்கே யாரேனும் வந்தால்
கல் வாரி வீசு;
பயித்தியமென்று
சொன்னாலும் சொல்வார்கள்.
சொல்லட்டுமே,
இல்லாவிட்டாலென்ன
சேர்த்தாவைக்குமிந்த சமூகம்???
வெறும் சாதிக்கும்
மதத்திற்கும் அலையும் பித்து பிடித்த
மனிதர்கள் திரியுமிடம் -
வாழுமிடமல்ல;
அன்பை -
நரபலியிட்டுவிட்டு
அரைக் காசு கவுரவம் வேண்டி
மகள்களையும் மகன்களையும் கொன்ற
ஜடங்கள் வாழும் -
மண் இது, பூமியல்ல
நம் மனசிங்கே கல்; கிறுக்கு;
கேட்டால் கீழ்தனமென்பார்கள்.
சொல்லட்டும் சொல்லட்டும்
காலம் அதோ -
காதலர்களின் பின்னே நகர்கிறது
நாளை ஜாதியை -
நாய் நரி மதிக்காது;
மனிதன் ஓர் நாள்
மனிதனாய் மதிக்கப் படுவான்,
அன்று நீயும் நானும்
காதலர்களாய் -
பேசப் படுவோம்!
-----------------------------------------------------------------
நன்றி
வித்யாசாகர் |
வித்யாசாகர் அவர்களின் இதர படைப்புகள் |
|
விருந்தினர் பதிவேடு |
இந்த வலைத்தளம் பற்றிய
உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள்
கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட
உதவியாக இருக்கும்.
நன்றி. |
உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள்
விரைவில். |
இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள்
|
|
|