Home விருந்தினர் பதிவேடு Wallpapers About Us Contact Us Contact Us

New World      Jokes     Quotes     Computer Tips & Tricks       Earn Money Online     Collections 4 U

நகைச்சுவை
கவிதை
சிறுகதை

பொன்மொழி

கட்டுரை

பொது அறிவு

பாப்பா பாடல்கள்

உங்கள் கருத்து

தொடர்புக்கு

படைப்பாளர்கள்
தெனாலிராமன் கதை

தமிழ் தோட்டம் ஆரம்பித்த நாள்

01-03-2006

புதிப்பிக்கப்பட்ட நாள்

 March 03, 2010

Locations of visitors to this page
பார்வையாளர்கள் வந்த பாதை

உங்கள் பார்வை எண்

click tracking
 

இத் தமிழ்த்தோட்டத்தில் உங்கள் நகைச்சுவைள் - தொகுப்பு வெளிவரவேண்டுமெனில்,

ி ...

ி ி ி....

உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி  

................................................................................................................

tamilparks

@

gmail.com

................................................................................................................

அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள் இங்கு சுட்டவும்

எவரேனும் இப்படி காதலித்ததுண்டா 3

 

 


கல்லூரியின்
சுவரெங்கும்
காதலன் காதலியின் பெயர்கள்;

நம் பெயரில்லாத
இடத்திலிருந்து துளிர்க்கிறது
உன் பெயரையும் எழுதுவதற்கான
ஆசை;

உன்னை எழுதி ஏன்
அங்கு வைக்கவேண்டுமென;
எழுதாமலேயே வந்து விடுகிறேன்,

நான் கல்லூரியின் சுவர்களில்
எழுதிடாத உன் பெயர் - எனக்குள்
காதலாய்.. காதலாய்.. பூக்கிறது!
-----------------------------------------------------------------
நீயும்
நானும்
பேசிக் கொள்வதை
காற்று நம்மிடம்
சொல்வதேயில்லை;

போகட்டும்,

நாம் ஒன்றாக சேரும் தினத்தில்
கட்டி இறுக்கிய நம்
நெருக்கத்தினால் -
காற்றினை வெப்பம்கொள்ளச் செய்வோம்!
-----------------------------------------------------------------

காலம்
காலமாகத் தான்
காதலிக்கிறார்கள்;

நீயும்
நானும் மட்டும்
எப்படியோ -
எதிரியாகிப் போனோம்
ஜாதி மதப் பேய்களுக்கு!
-----------------------------------------------------------------

நெடுந்தூரம்
நடந்துவந்து
நெடிய நேரத்தை
கால்கீழ் மிதித்து மிதித்தெரிந்து
விட்டுத் தான் -
உனக்காகக் காத்திருந்தேன்;

இதோ இமைக்கும் பொழுதில்
என்னைக் கடந்து -
அதோ செல்கிறாய்;

நீ போகும் வேகத்திற்கென்
கண்ணீர் மொத்தமும்
சாரை சாரையாய் -
தெருவை நனைக்கையில்
உனக்கென்ன குறைந்துவிடும் -

நீ போ.. போ..
உன் மிதிபடலில்
என் காத்திருப்பு
குறைந்தொன்றும்விடாதென
நான் சொல்லியா உனக்குத்
தெரியவேண்டும்?

உனக்கெல்லாம்
தெரியுமென்பதில் தானே
மீண்டும் மீண்டுமாய்
வலிகளின் மீதேறி -
உயிர் பெருகிறதென் காதல்!
-----------------------------------------------------------------

ஒன்று செய்
நீயும் என்னை
நினைத்துக் கொண்டேயிரு
நானும் உன்னை
நினைத்துக் கொண்டேயிருக்கிறேன்;

குறுக்கே யாரேனும் வந்தால்
கல் வாரி வீசு;

பயித்தியமென்று
சொன்னாலும் சொல்வார்கள்.

சொல்லட்டுமே,

இல்லாவிட்டாலென்ன
சேர்த்தாவைக்குமிந்த சமூகம்???

வெறும் சாதிக்கும்
மதத்திற்கும் அலையும் பித்து பிடித்த
மனிதர்கள் திரியுமிடம் -
வாழுமிடமல்ல;

அன்பை -
நரபலியிட்டுவிட்டு
அரைக் காசு கவுரவம் வேண்டி
மகள்களையும் மகன்களையும் கொன்ற
ஜடங்கள் வாழும் -
மண் இது, பூமியல்ல
நம் மனசிங்கே கல்; கிறுக்கு;
கேட்டால் கீழ்தனமென்பார்கள்.

சொல்லட்டும் சொல்லட்டும்
காலம் அதோ -
காதலர்களின் பின்னே நகர்கிறது
நாளை ஜாதியை -
நாய் நரி மதிக்காது;

மனிதன் ஓர் நாள்
மனிதனாய் மதிக்கப் படுவான்,

அன்று நீயும் நானும்
காதலர்களாய் -
பேசப் படுவோம்!
-----------------------------------------------------------------

 

நன்றி

 

வித்யாசாகர்

வித்யாசாகர் அவர்களின் இதர படைப்புகள்

விருந்தினர் பதிவேடு

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள் விரைவில்.
இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள்

 

Home

[Fun World] [About India] [New World] [Friends Gift] [Baby World] [Kanyakumari] [IT PARK]

[Mobile Park] [Collections4U] [more]