சீரின் முதல் எழுத்து அளவொத்து இருக்க, இரண்டாம் எழுத்து முதலிய மற்ற எழுத்துக்கள் ஒலி ஒத்து வருவது எதுகை ஆகும்.
சீரின் முதல் எழுத்து அளவொத்து இருத்தல் என்றால், மாத்திரை அளவு ஒத்திருத்தல் அல்லது குறிலாக இருந்தால் குறிலாகவும் நெடிலாக இருந்தால் நெடிலாகவும் இருத்தல் ஆகும்.
எடுத்துக்காட்டு :
அகரமுதல எழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு.
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
தற்காத்துத் தற்கொண்டார் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்.
அக, பக எதுகையில் ‘அ’வும் ‘ப’வும் குறில்.
வேண்டு, யாண்டு எதுகையில் வே, யா நெடில்.
எதுகை அமைக்கையில், முதல் அடி முதலெழுத்து குறிலாயின் இரண்டாமடி முதலெழுத்தும் குறிலாக இருக்க வேண்டும்; நெடில் என்றாலும் அவ்வாறே.
எந்த எழுத்திற்கு எந்தெந்த எழுத்து எதுகையாக வரும் என்று அடுத்து பார்ப்போம்.
tamilparks
@
gmail . com
என்ற முகவரிக்கு
அனுப்பி வையுங்கள்
வளரும்.......
நன்றி
தமிழநம்பி